Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Calendar Calendar

www.housetamil.blogspot.in

தவிக்க வைக்கும் மின்வெட்டு: அவதிப்படும் இல்லத்தரசிகள்

Go down

தவிக்க வைக்கும் மின்வெட்டு: அவதிப்படும் இல்லத்தரசிகள் Empty தவிக்க வைக்கும் மின்வெட்டு: அவதிப்படும் இல்லத்தரசிகள்

Post by Admin Thu Apr 04, 2013 11:38 pm

விலைவாசி உயர்வைப் போலவே, நீண்ட காலமாக தமிழக மக்களை வாட்டி வதைத்து வருவதில் மின்வெட்டுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது.

இந்த தொடர் மின் வெட்டினால் அனைத்துத் தரப்பு மக்களுமே பாதிக்கப்பட்டாலும், இல்லத்தரசிகள் படும் பாடு அதிகம் என்றே சொல்ல வேண்டும்.

மின்வெட்டினால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளை பதிவு செய்துள்ளது புதிய தலைமுறை.

மிக்சி, கிரைண்டர் இருந்தும்
அம்மிக்கல்லில் சட்னி தயாரிக்கும் சிரமத்தை தமிழகத்தின் ஏராளமான
இல்லத்தரசிகள் தினம் தினம் எதிர்கொண்டு வருகிறார்கள். வாஷிங் மிஷின்
இருந்தும், கைகளால் துணி துவைக்க வேண்டிய நிலை,மின் மோட்டார் இருந்தும்
கைகளால் நீர் இரைக்க வேண்டிய அவசியம்,பல வகைகளில் கைகொடுக்கும் ஃபிரிட்ஜ்-ஐ
உபயோகப்படுத்திக்கொள்ள முடியாத பரிதாபம் என மின்வெட்டால் இல்லத்தரசிகள்
படும் துயர் ஏராளம்.


பிரச்சனைகள் எவ்வளவுதான் இருந்தாலும்,
குழந்தைகளை குறித்த நேரத்திற்குள் பள்ளிக்கு அனுப்பியாக வேண்டும். ஆனால்,
மின்வெட்டு காரணமாக இரவில் சரியாகத் தூங்காத குழந்தைகள் காலைநேரத்தில்தான்
நன்றாக தூங்குகிறார்கள். இந்நிலையில் அவர்களை எழுப்புவதற்கே கஷ்டமாக
இருக்கிறது என்கிறார்கள் பெரும்பாலான அம்மாக்கள். அதிலும், கைக்குழந்தைகளை
வைத்திருக்கும் அம்மாக்களின் நிலையோ மேலும் பரிதாபமாக உள்ளது.


தவிக்க வைக்கும் மின்வெட்டு: அவதிப்படும் இல்லத்தரசிகள் Powercut2

தொடர் மின்வெட்டு குறித்து தமிழகத்தின்
பல்வேறு மாவட்டங்களில் இருக்கும் இல்லத்தரிசிகள் பதிவு செய்த கருத்துக்களை
வைத்துப் பார்க்கும் போது:


இந்த மின் வெட்டு உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாகவும் இல்லத்தரசிகளை நோகடித்து வருகிறது என்பது தான் யதார்த்தனமான உண்மை.

ஆட்டோ ஓட்டும் ஆலை முதலாளி:

தவிக்க வைக்கும் மின்வெட்டு: அவதிப்படும் இல்லத்தரசிகள் Rajkumar

தமிழகத்தில் தற்போது பெரும்பாலான
தொழில்களை கேள்விக்குறியாக்கி வரும் மின்வெட்டால், முதலாளிகளாக இருந்த பலர்
தொழிலாளியாக மாறியுள்ளனர்.


தொடர் மின்வெட்டு தனி மனிதனை எப்படி பாதிப்படைய செய்கிறது என்பதற்கு உதாரணமாக உள்ளார் மேலே புகைப்படத்தில் இருக்கும் ராஜ்குமார்.

சொந்தமாக 7 லேத் மெஷின்களை வைத்து
பலருக்கு வேலை அளித்து வந்த இந்த ராஜ்குமார் தற்போது ஆட்டோ ஓட்டி
வருகிறார். சாதாரண கூலி தொழிலாளியாக வாழ்க்கையை தொடங்கிய இவர், 10ஆண்டுகளாக
தனியாக தொழிற்சாலை நடத்தி வந்தார். ஆனால், தமிழகத்தில் தற்போது நிலவி
வரும் கடுமையான மின்வெட்டு இவரது வாழ்க்கையே மாற்றி விட்டது.


தொழிற் வளர்ச்சிக்காக வாங்கிய கடன்களை
அடைக்க மெஷின்களை விற்ற இவர், தொழிற்சாலையையும் மூடி விட்டார். மற்ற
முதலாளிகளிடமும் வேலைக்கு செல்ல முடியாத நிலையில், குடும்பத்தின் அன்றாட
செலவிற்காவது வருமானம் ஈட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் ராஜ்குமார்.
அதனால், தற்போது ஆட்டோ ஓட்டத்தொடங்கியுள்ளார்.


வாழ்க்கையில் வெளிச்சம் வீசுமா?
நாளடைவில் மின்வெட்டு சீராகும், மீண்டும் தொழிற்சாலையை ஆரம்பிக்கலாம் என்ற கனவோடே வாழ்ந்து வருகிறார் ராஜ்குமார்.

ஆனால், மின்சாரம் மூலம் இவரது வாழ்க்கைக்கு எப்போது வெளிச்சம் கிடைக்கும் என்பது மட்டும் விடைத்தெரியாத கேள்வியாகவே உள்ளது?!

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

https://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum