Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

March 2024
MonTueWedThuFriSatSun
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Calendar Calendar

www.housetamil.blogspot.in

பட்டுப் போகும் பட்டுத் தொழில்?

Go down

பட்டுப் போகும் பட்டுத் தொழில்? Empty பட்டுப் போகும் பட்டுத் தொழில்?

Post by kannanfab Wed Mar 27, 2013 1:02 am

பட்டுக்கான இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து, 10 சதவீதமாக அதிகரிக்கப்படுவதாக கடந்த மாதம் வெளியான மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இம்முடிவு காஞ்சிபுரம், ஆரணி, சின்னாளப்பட்டு உள்ளிட்ட தமிழகப் பகுதிகளில் வாழும் கைத்தறிப் பட்டு நெசவாளிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அரசின் முடிவால், நெசவாளிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பனாரஸ், காஞ்சிபுரம், தர்மாவரம் என பல இந்திய ஊர்கள் பட்டுக்கென்றே புகழ்பெற்றவை. இவற்றில் கணிசமான அளவு பட்டுப் புடவைகள் உற்பத்தியானாலும், இதற்கான மூலப்பொருளான பட்டு நூல் உற்பத்தி இன்றைய நிலையில் இந்தியாவில் குறைவுதான். நாட்டின் ஒட்டுமொத்த பட்டு தேவையில், மூன்றில் ஒருபகுதி இன்றும் இறக்குமதி மூலமே பெறப்படுகிறது.

இந்நிலையில், பட்டு நூல் உற்பத்தி செய்வோர் பாதிக்கப்படக் கூடாது என்ற நோக்கில் இறக்குமதி வரியை அரசு உயர்த்தியுள்ளது.ஆனால் இந்த முடி‌வால் இன்னொரு முனையில் பட்டாடை உற்பத்திச் செலவை அதிகரிப்பதோடு, ஏராளமானோரின் வேலைவாய்ப்பையும் பாதிக்கும் என்ற கருத்தும் எழுகிறது.

பட்டுக்கு இறக்குமதி வரி உயர்வை எதிர்த்து கடந்த ஒரு வாரமாக தமிழகமெங்கும் போராட்டங்கள் வலுப்பெற்று வருகின்றன.கோவை, சின்னாளப்பட்டி என பல இடங்களில் உள்ள கைத்தறிப் பட்டு நெசவாளிகள் உண்ணாவிரதம், பேரணி என பலவகையில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை நெசவாளிகளின் தேவைக்காக மட்டுமே மாதத்துக்கு 100 டன் கச்சாப் பட்டு சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாகவும், இப்போதைய வரி உயர்வால், கிலோவுக்கு 400 ரூபாய் கூடுதலாக செலுத்த வேண்டி வரும் என்றும் நெசவாளிகள் கவலை தெரிவிக்கின்றனர். திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பகுதியில், நெசவுத் தொழிலாளிகளுக்கு தினக் கூலி 50 ரூபாய் குறைக்கப்படும் நிலை ஏற்பட்டிருப்பதாகவும் குமுறல்கள் தொடங்கியுள்ளன.

நெசவாளிகள் இவ்வாறு குமுறும் நிலையில், சீனப் பட்டு இறக்குமதியை, அடுத்த 10 ஆண்டுகளில் முற்றிலும் நிறுத்தும் நோக்கத்தில் அரசு இருப்பதும் தெரியவந்துள்ளது.தேசிய பட்டு வாரியத்தின் இந்த தகவல், நெசவாளிகளுக்கு நிச்சயம் கவலை தருவதாக இருக்கும்.

இந்நிலையில் நாட்டின் தேவையை ஈடுகட்டும் அளவுக்கு உள்நாட்டில் கச்சா பட்டு நூல் உற்பத்தி செய்யவும், அதன் விலை பட்டு நெசவாளர்களுக்கு கட்டுபடியாகும் விலையில் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியதும் அவசியமாகிறது.

kannanfab

Posts : 81
Join date : 27/03/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum