Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அறிவிப்புக்கள்...நிர்வாகம்
by Admin Fri Jun 07, 2013 12:37 am

» வோடஃபோன், ஐடியா நிறுவனங்கள் மீது நடவடிக்கை கூடாது:டெல்லி உயர்நீதிமன்றம்
by Admin Sat Apr 13, 2013 10:30 am

» ஐதராபாத் போலீசில் ஆஜராகிறார் அஞ்சலி
by Admin Fri Apr 12, 2013 4:51 pm

» தங்கம், வெள்ளி : விலை நிலவரம்
by Admin Fri Apr 12, 2013 12:33 am

» அமெரிக்காவின் 17 வயது மாணவர் தன்னிச்சையாகவே முயன்று 20 மொழிகளை கற்றுள்ளார்
by Admin Fri Apr 12, 2013 12:26 am

» இலங்கை போருக்கு இந்தியாதான் காரணம்: கோத்தபய ராஜபக்ச
by Admin Fri Apr 12, 2013 12:25 am

» லேசர் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் புதிய ஆயுதம்
by Admin Fri Apr 12, 2013 12:22 am

» மின் தட்டுப்பாட்டை நீக்கவில்லை: முதல்வர் மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு
by Admin Thu Apr 11, 2013 10:18 am

» தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள்: முதல்வர் அறிவிப்பு
by Admin Thu Apr 11, 2013 10:16 am

» சென்னை- பெங்களூரு விரைவில் 2 அடுக்கு ரயில்
by Admin Thu Apr 11, 2013 12:23 am

» தங்கம் சவரனுக்கு ரூ. 80 ரூபாய் உயர்வு
by Admin Thu Apr 11, 2013 12:22 am

» மீனவர்களுக்கு கடல் எல்லை குறித்து எச்சரிக்கை விடுக்கும் கருவி கண்டுபிடிப்பு
by Admin Wed Apr 10, 2013 2:01 pm

» ஃபேஸ்புக்கின் புதிய மென்பொருள் ஃபேஸ்புக் ஹோம் சந்தைக்கு வருகிறது
by Admin Wed Apr 10, 2013 2:00 pm

» 1 லிட்டர் பெட்ரோலில் 1000 கி.மீ. ஓடும் அதிசய கார்!
by Admin Wed Apr 10, 2013 1:59 pm

» ஐபிஎல்:டெல்லியை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ்
by Admin Wed Apr 10, 2013 1:54 pm

» வட கொரியாவின் போர் பிரகடனத்திற்கு பிறகு உஷார் நிலையில் ஜப்பான்
by Admin Wed Apr 10, 2013 1:49 pm

» தெற்கு சூடானில் தாக்குதல் :இந்திய வீரர்கள் 5 பேர் பலி
by Admin Wed Apr 10, 2013 1:46 pm

» “மீண்டும் உள்நாட்டு யுத்தம் ஏற்படலாம்”: இலங்கைக்கு அமெரிக்கா எச்சரிக்கை
by Admin Wed Apr 10, 2013 1:40 pm

» இலங்கையில் தமிழ் படங்களை திரையிட புத்த பிட்சுகள் எதிர்ப்பு
by Admin Wed Apr 10, 2013 1:39 pm

» 10-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி 15-ம் தேதி தொடக்கம்
by Admin Wed Apr 10, 2013 1:35 pm

April 2024
MonTueWedThuFriSatSun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930     

Calendar Calendar

www.housetamil.blogspot.in

“மனம் தளராத மாணவர்கள்”

Go down

“மனம் தளராத மாணவர்கள்” Empty “மனம் தளராத மாணவர்கள்”

Post by Admin Fri Mar 22, 2013 12:30 am











“மனம் தளராத மாணவர்கள்” Student-Protest




லங்கை இனப்படுகொலையை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்றும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தஞ்சை மாவட்டம்
கும்பகோணத்தில், மத்திய அமைச்சர் ஜி.கே. வாசனின் அலுவலகத்தை கல்லூரி
மாணவர்கள் முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இலங்கை அதிபர்
ராஜபக்சேவின் உருவ பொம்மையையும் எரித்து தங்கள் எதிர்ப்பை
வெளிப்படுத்தினர்.


திருவாரூர் மாவட்டம்
நன்னிலம் அருகே யுள்ள ஆண்டிப்பந்தல் கிராமத்தில் பல்வேறு கிராமங்களைச்
சேர்ந்த 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப்
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இதேபோல், திருத்துறைப்பூண்டி
அருகே தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 20 பேர், இரண்டாவது நாளாக
பட்டினிப் போராட்டத்தை தொடர்கின்றனர். குடிவாசலில் நூற்றுக்கும் மேற்பட்ட
வேன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில்
ஈடுபட்டுள்ளனர்.


நீலகிரி மாவட்டத்தில்
உதகை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 6ஆவது நாளாக
பட்டினிப்போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இன்று ரயில் மறியலில் ஈடுபட்ட
17 மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.


தூத்துக்குடியில்
அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 21 மாணவர்களின்
உண்ணாவிரதப் போராட்டம் 2ஆவது நாளாக தொடர்கிறது. கும்பகோணத்தில் வணிகர்கள்
கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இலங்கையில் நடைபெற்ற இறுதிகட்டப்
போரின்போது, அப்பாவித் தமிழர்களைத் திட்டமிட்டுக் கொன்று குவித்த
ராஜபக்சவைப் போர்க்குற்றவாளி என அறிவிக்க வலியுறுத்தி, தமிழகத்தில் கல்லூரி
மாணவர்களின் தொடர் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இலங்கையில்
தமிழீழம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி, தலைநகர் சென்னையில்
ஆயிரக்கணக்கான மாணவர்கள் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை
அண்ணா சாலையில் மாணவர்கள் மறியலில் ஈடுபட்டனர். தென்னிந்திய ராணுவத்
தலைமையகத்தை முற்றுகையிடச் சென்ற மாணவர்களை சிந்தாதரிப்பேட்டை அருகே
தடுத்து நிறுத்திய போலீஸார் அவர்களை கைது செய்தனர்.


பிரதமரின் உருவ பொம்மை எரிப்பு:
இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து,
கோவை, திருச்சி ஆகிய நகரங்களில் கல்லூரி மாணவர்கள் பத்தாவது நாளாக
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கையில் இனப் படுகொலையைத் தடுக்கத் தவறிய
மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ஈரோட்டில் பிரதமர்
மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரின் உருவ பொம்மை
எரிக்கப்பட்டது.


தமிழகத்தில் இன்று முற்றுகைப் போராட்டம்:
இலங்கைத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும், இந்த விவகாரத்தில்
இந்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், மதுரை, நெல்லை, குமரி ஆகிய
மாவட்டங்களிலும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதே
கோரிக்கையை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முற்றுகைப் போராட்டங்கள்
நடைபெறவுள்ளன.


புதுவையில் இன்று கடையடைப்பு:
தமிழகத்தைப் போன்று, புதுவையிலும் மாணவர் போராட்டம் எழுச்சி பெற்றுள்ளது.
இலங்கை அதிபர் ராஜபக்சவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி,
புதுச்சேரியில் இன்று கடையடைப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது. புதுச்சேரி
பல்கலைக்கழக மாணவர்கள் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

Admin
Admin

Posts : 201
Join date : 15/03/2013

https://dinatamil.forumta.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum